×

மயிலாடுதுறை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

 

மயிலாடுதுறை,ஜன.14: மயிலாடுதுறை நகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு கரும்பு, இஞ்சி, மஞ்சள்கொத்து, உணவு பொட்டலம் உள்ளிட்ட பரிசுத்தொகுப்பு வழங்கும் விழா நடந்தது, நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் சிவக்குமார், நகராட்சி ஆணையர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் மகாபாரதி சிறப்பு விருந்தினராக சமத்துவபொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள் 400 பேருக்கு கரும்பு, இஞ்சி, மஞ்சள்கொத்து, உணவுபொட்டலம் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் நகர மன்ற உறுப்பினர்கள், சம்பத், ரிஷிகுமார், ரமேஷ், நகராட்சி செயற்பொறியாளர் மகாதேவன், கவுன்சிலர்கள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post மயிலாடுதுறை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Pongal ,Municipal Chairman ,Selvaraj ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி